பங்குச் சந்தையில் இன்று 330 புள்ளிகள் சரிவு!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்றும் சரிவு தொடர்ந்தது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் 330 புள்ளிகள் சரிந்தது.
ஒரு கட்டத்தில் 18000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்த சென்செக்ஸ், சற்றே உயர்ந்து மீண்டும் 18000-ஐத் தாண்டி நிலைப் பெற்றது. கடந்த நான்கு தினங்களில் சென்செக்ஸ் இழந்துள்ள புள்ளிகள் 825.
டாடா மோட்டார்ஸ், ஜின்டால் ஸ்டீல், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், எல் அன் டி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்ஸி, ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.
தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 88 புள்ளிகள் சரிந்து 5,417 புள்ளிகளில் முடிவடைந்தது.
உற்பத்திக்கான மூலப்பொருள்கள் விலை உயர்வு மற்றும் வட்டி வீதங்களில் காணப்படும் உயர்வு போன்றவை இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications