பாதை பிரச்சனை-இந்து முன்னணியினர் திடீர் மறியல்-போலீசார் குவிப்பு
சிங்கை: கெபி கிறிஸ்தவ ஆலய பாதை பிரச்சனையில் இந்து முன்னணியினர் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதற்காக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் சிங்கை இருதயகுளம் கெபி கிறிஸ்தவ ஆலயத்தில் பொது வழிப் பாதையில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளதால் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் கிருஷ்ணர் சிலையை நிறுவ இந்து முன்னணியி்னர் முயன்றதால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் கிறிஸ்தவ சபை நிர்வாகம் தரப்பில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை போலீசார் இடித்தனர். இதனால் மேலு்ம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரஸ்வதி சம்பவ இடத்தை பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது உத்தரவின் பேரில் சர்வே எண்கள் உள்ள இடம் அளக்கப்பட்டது.
இதற்கிடையே இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் அரசு ராஜா தலைமையில் மாவட்ட தலைவர் பால் மாரியப்பன் உள்ளி்ட்டோர் தடுப்பு சுவர் கட்டியுள்ள பகுதியை பார்வையிட வந்தனர். இதற்கு கிறிஸ்தவ சபை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
இதனால் இந்து முன்னணியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதாக 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிங்கை இருதயகுளம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications