உச்ச நீதிமன்றத்துக்கு கணக்கு காட்டவே ராசா கைது செய்யப்பட்டுள்ளார்! - ஜெ
சென்னை: ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று உச்சநீதி மன்றத்துக்கு காட்டவே ஆ.ராசாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் ஓர் அங்கமான தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சொல்கிறார்.
ஆனால், மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி கபில்சிபிலோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு சிறு இழப்புகூட ஏற்படவில்லை என்கிறார். மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்றால் எதற்காக ஆ.ராசாவை சி.பி.ஐ. கைதுசெய்ய வேண்டும்?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி குழப்பமான நிலையில் இருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இதன்மூலம், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு ஒரு பரிகாச பொருளாக மாறியுள்ளது.
ஆ.ராசா மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி.) விசாரிக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் மாற்றமே இல்லை.
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் மத்திய அரசின் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு விதமான கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வரும் சூழ்நிலையில், ஜே.பி.சி. விசாரணைதான் அதற்கு சரியான விடையை அளிக்கும்.
ஆ.ராசா மீதான கைது நடவடிக்கை பொதுமக்களை ஏமாற்றவும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று சி.பி.ஐ. விசாரணையை உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு கணக்குக் காட்டவும்தான் இந்த நடவடிக்கை. இதில் நாட்டு நலனோ, நீதியை நிலை நாட்டும் உத்வேகமோ இல்லை,"என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications