உச்ச நீதிமன்றத்துக்கு கணக்கு காட்டவே ராசா கைது செய்யப்பட்டுள்ளார்! - ஜெ
சென்னை: ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று உச்சநீதி மன்றத்துக்கு காட்டவே ஆ.ராசாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் ஓர் அங்கமான தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சொல்கிறார்.
ஆனால், மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி கபில்சிபிலோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு சிறு இழப்புகூட ஏற்படவில்லை என்கிறார். மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்றால் எதற்காக ஆ.ராசாவை சி.பி.ஐ. கைதுசெய்ய வேண்டும்?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி குழப்பமான நிலையில் இருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இதன்மூலம், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு ஒரு பரிகாச பொருளாக மாறியுள்ளது.
ஆ.ராசா மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி.) விசாரிக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் மாற்றமே இல்லை.
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் மத்திய அரசின் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு விதமான கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வரும் சூழ்நிலையில், ஜே.பி.சி. விசாரணைதான் அதற்கு சரியான விடையை அளிக்கும்.
ஆ.ராசா மீதான கைது நடவடிக்கை பொதுமக்களை ஏமாற்றவும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று சி.பி.ஐ. விசாரணையை உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு கணக்குக் காட்டவும்தான் இந்த நடவடிக்கை. இதில் நாட்டு நலனோ, நீதியை நிலை நாட்டும் உத்வேகமோ இல்லை,"என்றார்.
-
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications