எஸ்.ஐக்கு மதுரை மதுரை உயர் நீதிமன்றம் அபராதம்
மதுரை: மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்த எஸ். ஐ.-க்கு மதுரை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தீயணைப்பு அதிகாரி குமார். கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 -ம் தேதி கரிவலம் வந்தநல்லூர் எஸ்.ஐ கமலா மற்றும் முருகானந்தம், ஏட்டுகள் மாடசாமி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் குமாரை சித்ரவதை செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் அவர் நஷ்டஈடு கேட்டு மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணையம், ஓய்வு பெற்ற தீயணைப்பு அதிகாரி குமாருக்கு ரூ. 40 ஆயிரம் நஷ்டஈடு வழங்கவும், நான்கு காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நான்கு பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஓய்வு பெற்ற தீயணைப்பு அதிகாரி குமாரை காவலர்கள் சித்ரவதை செய்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை மனுதாரர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். அதை ரத்து செய்ய முடியாது.
எஸ்.ஐ. முருகானந்தம் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து ஏற்கனவே மனுத்தாக்கல் செய்து அதை திரும்ப பெற்றுள்ளார். அவருக்கு மறுபடியும் வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவு அளிக்கவில்லை.
எனவே, எஸ்.ஐ. முருகானந்தத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications