Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடல்நிலை மோசமடைந்தது.... நினைவிழந்தார் பார்வதி அம்மாள்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கவலைக்கிடமாக இருப்பதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் தன் சுயநினைவை இழந்துவிட்டதாக சாவகச்சேரி மருத்துவமனை தகவல் தெரி்வித்துள்ளது.

சில தினங்களாக, பேசும் சக்தியை முற்றிலும் இழந்துவிட்ட பார்வதி அம்மாள், யாரையும் அடையாளம் காண்பதிலும் சிரமம் இருந்தது.

பார்வதி அம்மாளின் கணவர் இறந்ததில் இருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம்தான் அவரைப் பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வரும் தகவல்கள் கவலையடைய வைத்துள்ளன.

கணவர் வேலுப்பிள்ளை மறைவுக்குப் பிறகு, உடல்நிலை மோசமடைந்த நிலையில் மலேசியாவில் உள்ள மகள் வீட்டுக்குப் போன பார்வதி அம்மாள், மேல் சிகிச்சைக்காக உரிய விசாவுடன் தமிழகம் வந்தார். அவரை விமான நிலையத்தில் இறங்க விடாமல் திருப்பியனுப்பியது இந்திய / தமிழக அரசு.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய / தமிழக அரசுகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இது மத்திய அரசு விவகாரம், தங்களுக்கு எதுவும் தெரியாது தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் பார்வதி அம்மாளை தமிழகம் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்ல கேட்டுக் கொண்டன அரசுகள். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட அந்த மூதாட்டி, தனது சொந்த ஊரான இலங்கை வல்வெட்டித் துறை மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெற்று வந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+