வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம்
ஷில்லாங்: நேற்றிரவு 7. 24 மணிக்கு அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் இம்பாலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் இந்திய-மியான்மர் எல்லையை மையமாகக் கொண்டு ஏற்பட்டது என்று மத்திய நிலநடுக்கவியல் ஆய்வக அறிக்கை தெரிவித்துள்ளது.
அங்குள்ள மக்கள் சுமார் 10 நொடிகள் அதிர்வுகளை உணர்ந்தனர். மேலும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இது வரை உயிர் இழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வரவில்லை.
மேகாலயாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 30 வினாடிகள் வரை உணரப்பட்டது. அருணாச்சல பிரதேசத்திலும் லேசான அதிர்வு இருந்துள்ளது.
ஷில்லாங்கில் ஏற்பட்ட நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகவும், இம்பாலில் 6.5 ஆகவும் பதிவாகியுள்ளது. இம்பாலில் மட்டும் 10 நிமிடத்திற்கு மேல் அதிர்வு இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications