மேட்டூரில் அதிமுக முன்னாள் நகரசெயலாளர் வெட்டிக் கொலை: போலீஸ் குவிப்பு
மேட்டூர்: மேட்டூரில் அதிமுக முன்னாள் நகரச் செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அ.தி.மு.க. முன்னாள் நகரச் செயலாளராக இருந்தவர் பழனிச்சாமி. இன்று காலை மேட்டூரில் அவரை ஒரு மர்மக்கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் விரட்டிச் சென்று தாக்கியுள்ளது. இதில் பழனிச்சாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.
பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இது குறித்து தகவல் அறிந்த அதிமுக நிர்வாகிகள் அவரது வீட்டு முன்பு குவிந்தனர். இதன் காரணமாக அங்கு பதட்டம் நிலவுகின்றது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் பிரேதத்தை கைப்பற்றினர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம், குற்றவாளிகள் யார் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications