சொத்து குவிப்பு வழக்கு-ஒரு பாராவை திருத்த 6 மாதம் அவசாகம் கோரிய ஜெ!

பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவை விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
ஆனால், அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், அவரால் நேரில் ஆஜராக முடியாது என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜூனா கூறுகையில், தேவைப்படும்போது ஜெயலலிதா விசாரணைக்கு நேரில் அழைக்கப்படுவார் என்றார்.
இதையடுத்து ஒரு சாட்சியின் வாக்குமூலத்தை மொழி பெயர்த்ததில் ஒரு பாராவில் தவறு இருப்பதாகவும், அதை சரி செய்ய 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இந்தத் தவறை ஓரிரு நாளில் சரி செய்துவிட முடியும் என்று கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி ஆகியோர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை ஜெயலலிதா இழுத்தடித்து வருவதாக திமுக புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெ.வுக்கு உடல்நிலை சரியில்லை என சட்டசபையில் தீர்மானம்:
முன்னதாக நேற்று சட்டசபையில் அதிமுக சார்பில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் சட்டமன்ற விதி 20(1)ன் படி இந்த கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருப்பதற்கு அனுமதி கோரப்பட்டது.
இதை ஏற்ற சபாநாயகர் தீர்மானத்தை கொண்டு வர சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளித்தார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே இந்த கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ள இயலாததற்கு காரணமாக இந்த தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்று நான் முன் மொழிகிறேன் என்றார்.
அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் இதை வழி மொழிந்தார். இதையடுத்து இந்த கூட்டத் தொடருக்கு ஜெயலலிதா வராமல் இருப்பதற்கான அனுமதி வழங்கும் தீர்மானம் ஏகமதான குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந் நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின்போது, உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஜெயலலிதாவை நேரில் ஆஜராகுமாறு கோரக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications