மீண்டும் அமெரிக்கா செல்ல ராஜபக்சே திட்டம்?
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே மீண்டும் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்ளப் போவதாகவும் செய்திகள் அந்த தெரிவிக்கின்றன.
ராஜபக்சேவுக்கு புற்று நோய் தாக்கியுள்ளதாகவும், இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவே அவர் அண்மையில் அமெரிக்கா சென்றதாக செய்திகள் வெளியானது. இதற்கு இலங்கை அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜபக்சே மீண்டும் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இன்னும் சில வாரங்களுக்குள் ராஜபச்சே அமெரிக்க பயணத்தை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது
அமெரிக்க பயணம் காரணமாக இம்முறை நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜபக்சே அதிகளவு பிரச்சார கூட்டங்களில் கலந்துகொள்ளமாட்டார் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications