Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொகுதி பங்கீட்டு குழு-இளங்கோவனை ஒதுக்கி வைத்த காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

EVKS Ilangovan
சென்னை: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த அமைக்கப்பட்ட குழுவில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இடம் தரப்படாதது அவரது ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோருக்கு இடம் தரப்பட்டது. சிதம்பரம், வாசன், ஜெயந்தி, தங்கபாலு ஆகிய நால்வருமே திமுகவுக்கு ஆதரவானவர்கள். குழுவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடம் தந்தாக வேண்டுமே என்ற காரணத்துக்காக ஜெயக்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். குழுவில் உள்ள பெருந்தலைகளை மீறி இவர் இந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் பெரிய அளவில் ஏதும் செய்துவிட முடியாது என்று காங்கிரசாரே தெரிவிக்கின்றனர்.

காங்கிரசுக்கு 30+30+30 என்ற பார்முலா அடிப்படையில் 90 இடங்கள் வேண்டும் என்று கேட்டு திமுகவை அதிர வைத்தார் ராகுல் காந்தி. இது தொடர்பாக பேச்சு நடத்தும் குழுவிலும் இளங்கோவன், யுவராஜா போன்ற திமுக எதிர்ப்பாளர்களை சேர்த்து நமக்கு உண்மையிலேயே பெரும் தலைவலி தரப் போகிறார் ராகுல் என்று தான் திமுகவும் நினைத்திருந்தது.

ஆனால், சோனியா-குலாம் நபி ஆசாத் ஆகியோர் பேசி முடிவு செய்த குழு தான் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம், வாசன், ஜெயந்தி இடம் பெற்றதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது திமுக.

குறிப்பாக இளங்கோவனுக்கு இதில் இடம் தராமல் காங்கிரஸ் ஒதுக்கியது திமுக தரப்பை தாஜாபடுத்த காங்கிரஸ் எடுத்துள்ள முயற்சியாகவே கருதப்படுகிறது. ராசா கைதால் கோபத்தில் உள்ள திமுகவிடம் 90 இடங்கள் வேண்டும் என்று கேட்டதோடு, பாமகவை சேர்க்கக் கூடாது என்றெல்லாம் நிபந்தனை போட்டு எரிச்சலடையச் செய்தது காங்கிரஸ்.

இந் நிலையில் இளங்கோவனையும் குழுவில் சேர்த்தால், அது திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஒரேயடியாக கலகலக்க வைத்துவிடும் என்று கருதியே அவரை ஓரங்கட்டியதாகத் தெரிகிறது.

ஆனால், எப்படியும் இந்தக் குழுவில் இடம் தந்துவிடுவார் என்று பெரிதும் நம்பியிருந்தார் இளங்கோவன். இதன்மூலம் தனது ஆதரவாளர்களுக்கான தொகுதிகளை கேட்டு வாங்கிவிடலாம் என்ற நப்பாசையிலும் இருந்தார். திமுகவை மிகக் கடுமையாக விமர்சி்த்து வந்ததால், தனக்கு உரிய மரியாதை கொடுத்து குழுவில் சேர்த்துவிடுவார்கள் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தார் இளங்கோவன்.

ஆனால், இளங்கோவனின் இந்த ஆசையில் மண் விழுந்துவிட்டதால், அவரை நம்பி சீட் வாங்கலாம் என்றிருந்த காங்கிரசாரும் அவரிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்துவிட்டனராம்.

இதையடுத்து தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு போராட்டங்கள் நடத்தி, தனது முக்கியத்துவத்தை தலைமைக்கு உணர்த்தச் சொல்லியிருக்கிறாராம இளங்கோவன்.

அவரது ஆதரவாளர்களான மத்திய அரசின் முன்னாள் கைத்தறி வாரிய உறுப்பினர் ரங்கபாஷ்யம், தென் சென்னை மாவட்டத் தலைவர் மங்களராஜ் உள்ளி்ட்டோர் நேற்று இளங்கோவனுடன் ஆலோசனை நடத்தினர். அதில், மேலிடத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், முதல் கட்டமாக சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

நாளை சத்தியமூர்த்தி பவனில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால், உண்மையிலேயே இவர்கள் உண்ணாவிரதம் இருப்பார்களா என்று தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+