தொகுதி பங்கீட்டு குழு-இளங்கோவனை ஒதுக்கி வைத்த காங்கிரஸ்!

சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோருக்கு இடம் தரப்பட்டது. சிதம்பரம், வாசன், ஜெயந்தி, தங்கபாலு ஆகிய நால்வருமே திமுகவுக்கு ஆதரவானவர்கள். குழுவில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இடம் தந்தாக வேண்டுமே என்ற காரணத்துக்காக ஜெயக்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். குழுவில் உள்ள பெருந்தலைகளை மீறி இவர் இந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளில் பெரிய அளவில் ஏதும் செய்துவிட முடியாது என்று காங்கிரசாரே தெரிவிக்கின்றனர்.
காங்கிரசுக்கு 30+30+30 என்ற பார்முலா அடிப்படையில் 90 இடங்கள் வேண்டும் என்று கேட்டு திமுகவை அதிர வைத்தார் ராகுல் காந்தி. இது தொடர்பாக பேச்சு நடத்தும் குழுவிலும் இளங்கோவன், யுவராஜா போன்ற திமுக எதிர்ப்பாளர்களை சேர்த்து நமக்கு உண்மையிலேயே பெரும் தலைவலி தரப் போகிறார் ராகுல் என்று தான் திமுகவும் நினைத்திருந்தது.
ஆனால், சோனியா-குலாம் நபி ஆசாத் ஆகியோர் பேசி முடிவு செய்த குழு தான் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம், வாசன், ஜெயந்தி இடம் பெற்றதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது திமுக.
குறிப்பாக இளங்கோவனுக்கு இதில் இடம் தராமல் காங்கிரஸ் ஒதுக்கியது திமுக தரப்பை தாஜாபடுத்த காங்கிரஸ் எடுத்துள்ள முயற்சியாகவே கருதப்படுகிறது. ராசா கைதால் கோபத்தில் உள்ள திமுகவிடம் 90 இடங்கள் வேண்டும் என்று கேட்டதோடு, பாமகவை சேர்க்கக் கூடாது என்றெல்லாம் நிபந்தனை போட்டு எரிச்சலடையச் செய்தது காங்கிரஸ்.
இந் நிலையில் இளங்கோவனையும் குழுவில் சேர்த்தால், அது திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஒரேயடியாக கலகலக்க வைத்துவிடும் என்று கருதியே அவரை ஓரங்கட்டியதாகத் தெரிகிறது.
ஆனால், எப்படியும் இந்தக் குழுவில் இடம் தந்துவிடுவார் என்று பெரிதும் நம்பியிருந்தார் இளங்கோவன். இதன்மூலம் தனது ஆதரவாளர்களுக்கான தொகுதிகளை கேட்டு வாங்கிவிடலாம் என்ற நப்பாசையிலும் இருந்தார். திமுகவை மிகக் கடுமையாக விமர்சி்த்து வந்ததால், தனக்கு உரிய மரியாதை கொடுத்து குழுவில் சேர்த்துவிடுவார்கள் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தார் இளங்கோவன்.
ஆனால், இளங்கோவனின் இந்த ஆசையில் மண் விழுந்துவிட்டதால், அவரை நம்பி சீட் வாங்கலாம் என்றிருந்த காங்கிரசாரும் அவரிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்துவிட்டனராம்.
இதையடுத்து தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு போராட்டங்கள் நடத்தி, தனது முக்கியத்துவத்தை தலைமைக்கு உணர்த்தச் சொல்லியிருக்கிறாராம இளங்கோவன்.
அவரது ஆதரவாளர்களான மத்திய அரசின் முன்னாள் கைத்தறி வாரிய உறுப்பினர் ரங்கபாஷ்யம், தென் சென்னை மாவட்டத் தலைவர் மங்களராஜ் உள்ளி்ட்டோர் நேற்று இளங்கோவனுடன் ஆலோசனை நடத்தினர். அதில், மேலிடத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், முதல் கட்டமாக சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
நாளை சத்தியமூர்த்தி பவனில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால், உண்மையிலேயே இவர்கள் உண்ணாவிரதம் இருப்பார்களா என்று தெரியவில்லை.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications