பிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
மணிலா: பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையே கடலுக்கு அடியில் நேற்று இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அது ரிக்டர் அளவுகோளில் 6.5 மற்றும் 6.7 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரி்கக புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் தீவான மின்டானோவில் உள்ள ஜெனரல் சான்டோஸ் நகரில் இருந்து 330 கிமீ தூரத்தில் நேற்றிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடத்திற்கு முன் தான் இந்த இடத்தில் இருந்து சில கிமீ தூரத்தில் உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications