பெங்களூர்-இன்டிகா டாக்சியில் பெண்ணைக் கடத்தி கற்பழித்த 6 பேர் கும்பல்
பெங்களூர்: பெங்களூரில் 26 வயது பெண்ணைக் கடத்திச் சென்ற 6 பேர் கும்பலை அவரை கற்பழித்தது.
விஜயநகரைச் சேர்ந்த அந்தப் பெண், ஆட்டோ ஓட்டுனரான தனது நண்பர் மோகனுடன் எலெக்ட்ரானிக் சிட்டி அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஆட்டோவும் எதிரே வந்த இன்டிகா டாக்சியும் மோதிக் கொண்டன.
அந்த டாக்சியில் 4 பேர் கும்பல் இருந்தது. அவர்கள் டாக்சிக்கு ஏற்பட்ட சேதத்துக்கு மோகனிடம் ரூ. 3,500 கேட்டனர். அவ்வளவு பணம் இல்லாததால் தனது நண்பரிடம் ரூ. 1,500 வாங்கி அந்தக் கும்பலிடம் தந்தார் மோகன்.
இதையடுத்து மோகனையும் அந்தப் பெண்ணையும் டாக்சியில் வலுக்கட்டாயமாக ஏற்றி அழைத்துச் சென்றது. வழியில் டாக்சியிலிருந்து மோகன் வெளியே குதித்து தப்பிவிட்டார். இது குறித்து போலீசாருக்கும் தகவல் தந்தார்.
போலீசார் விசாரணை நடத்தி அந்த டாக்சியின் டிரைவரான சந்தோஷ் என்பவரின் வீட்டை மறுநாள் காலை அடைந்தபோது, அங்கு அந்தப் பெண்ணை அந்தக் கும்பல் வலுக்கட்டாயமாக வீட்டியில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
அப்போது போலீசாரிடம் கண்ணீல் மல்க அந்தப் பெண் கூறுகையில், டாக்சியில் வந்த 4 பேரும் மேலும் அவர்களது 4 நண்பர்களும் சேர்ந்து தன்னை இரவில் பேகூர் ரோட்டில் உள்ள விஸ்வப்பிரியா லே-அவுட்டுக்குக் கொண்டு சென்று அங்கு ஒதுக்குப்புறமான உள்ள திறந்த வெளியில் வைத்து கற்பழித்ததாகக் கூறினார்.
மேலும் தன்னை சந்தோஷின் வீட்டுக்கு காலையில் தான் கொண்டு வந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து அவரை அடைத்து வைத்திருந்த சந்தோஷின் நண்பர்கள் ம்ருத்யுஞ்செய், ரஞ்சித், பசவராஜ், மது ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தப்பியோடிவிட்ட சந்தோஷ், தாயப்பா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.