சென்னை விமான நிலையத்தில் வரி ஏய்ப்புக்கு உதவிய சிபிஐ டிஎஸ்பி கைது
சென்னை: வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களுக்கு சுங்க வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்ய உதவியதாக சிபிஐ டிஎஸ்பி,சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ அதிகாரிகளே கையும் களவுமாகப் பிடித்தனர்.
அமெரிக்காவில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வந்த வினோத்குமார், வரதன், சாதிக், கிரீஷ் ஆகியோர் வரி விதிப்புக்குட்பட வேண்டிய பொருள்களுடன் வந்தனர். இவர்களை வரவேற்க நாக்பூரில் சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவில் டிஎஸ்பியாக உள்ள கே.ஏ.ஏ.சலாம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
அமெரிக்காவில் இருந்து வந்த நபர்களை, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி , வரிவிதிப்புக்கு உட்படும் வழியில் அல்லாமல், கிரீன் சேனல் வழியாக அழைத்துச் செல்ல முயன்றார்.
அப்போது, அங்கு திடீர் சோதனை மேற்கொண்ட சென்னையை சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் சலாமை கைது செய்தனர். வரிஏய்ப்பு செய்ய முயன்றதாக வினோத்குமார், வரதன், சாதிக், கிரீஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்களுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் மேலும் சில சுங்கத்துறை அதிகாரிகள் குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications