கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு சமக தலைவர் சரத் குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசுக் கலைக் கல்லூரிகளில் தற்காலிகமாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் அந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications