5 சுயேச்சைகள் பதவி பறிப்பு செல்லும்: உயர் நீதிமன்றம்- தப்பியது எதியூரப்பா அரசு

பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 5 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் கடந்த ஆண்டு ஆதரவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து அக்டோபர் 5ம் தேதியன்று சட்டசபையில் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க இருந்த நிலையில் இவர்களை சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர் போப்பையா. மேலும் பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 11 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதன்மூலம் எதியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அவர்களது பதவி பறிப்பு உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதனால் எதியூரப்பா அரசு மீண்டும் தப்பியுள்ளது.
அதே நேரத்தில் இந்த 5 பேருடன் சேர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மேலும் 11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள், இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications