எஸ்-பேண்ட் ஊழல்: இஸ்ரோவில் பெய்த தங்க காசு மழை!

விண்வெளித்துறைக்கு நாடு செலவழிக்கும் நிதியோடு கணக்கிட்டால் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் ஈட்டும் லாபம் மிகக் மிகக் குறைவானதே. அதிலுள்ள அதிகாரிகள் பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு போய் வரவும், படிக்க-ஆராய்ச்சிக்காக என்று சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் ஊர் சுற்றவும் செலவிடும் தொகையெல்லாம் சொன்னால் மூச்சு முட்டும்.
இப்படி சொற்ப லாபம் ஈட்டும் இந்த நிறுவனம் தனது லாபத்தில் இருந்து சுமார் 8 சதவீத பணத்தை ஒதுக்கி, அதில் தலா 4 கிராம் எடை கொண்ட 15,600 தங்க காசுகளை வாங்கி அதை தங்களுக்குத் தாங்களே பரிசாக வழங்கிக் கொண்டுள்ளனர்.
இதை விண்வெளித்துறை கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதால் அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும், இஸ்ரோ அதிகாரிகளுக்கும் தங்க நாணயங்களை பரிசாக வழங்கியுள்ளனர்.
எதற்கு இந்த தங்க நாணயம் என்று கேட்டால், ஆண்ட்ரிக்ஸ் உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடினார்களாம். இதற்காக அவர்கள் செலவிட்ட தொகை ரூ. 7.5 கோடி.
மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷன் விதிகள்படி அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பரிசு கொடுப்பதே குற்றமாகும்.அதை மீறி ஆன்டிரிக்ஸ் நிறுவனம் செயல்பட்டுள்ளது. மத்திய தணிக்கை துறை விசாரணையில் தான் இந்தத் தங்க காசு விவகாரம் தெரிய வந்துள்ளது. இதிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
தங்கக் காசுகளை வாங்கியவர்களில் இஸ்ரோ துணை நிறுவனமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், நேசனல் ரிமோட் சென்சிங் ஏஜென்சி, இஸ்ரோ சாட்டிலைட் டிராக்கிங் சென்டர், மாஸ்டர் கண்ட்ரோல் பெஸிலிட்டி ஆகியவற்றின் அதிகாரிகளும் அடக்கம்.
ஆன்டிரிக்ஸ் நிறுவனம் செய்து வரும் தவறுகளை மூடி மறைக்கவே அனைத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் தங்க காசுகள் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications