தூக்கத்திற்கு இடையூறு- நாகர்கோவிலில் தந்தையைக் கொன்ற மகன்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தூக்கத்திற்கு இடையூறாக இருந்த தந்தையை கிரைண்டர் குழவியால் தாக்கி மகன் கொலை செய்துள்ளார்.
நாகர்கோவில் அருகுவிளை ஆர்சி சர்ச் பகுதியில் வசித்து வந்தவர் மரிய பாக்கியநாதன். இவரது மகன் ஆரோக்கியராஜன்.
பாண்டிசேரியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து கொத்தவேலை, சென்டரிங் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஊருக்கு வந்தவர் உள்ளூரில் கொத்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். மரிய பாக்கியநாதன் இருமல் மற்றும் சளித் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இரவி்ல் தூங்கும்போதும் அவதிபட்டு வந்துள்ளார். இதனால் தனது தூக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி ஆரோக்கியராஜ் தந்தையுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
அப்போது தாயார் ரோஸ்மேரி சாமாதனம் செய்துள்ளார். நேற்று முன்தினம் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மரிய பாக்கியநாதன் இருமிக் கொண்டிருந்தார். இதனால் நள்ளிரவில் தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆரோக்கியராஜ் வீட்டில் இருந்த கிரைண்டர் குழவிக் கல்லை எடுத்து தந்தை மீது போட்டு தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாக்கியநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக ரோஸ்மேரி அளித்த புகாரின் பேரில் ஆரோக்கியராஜனை வடசேரி போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications