'தெலுங்கானா': சட்டசபையில் 2 எம்எல்ஏக்களை அடித்து உதைத்த டிஆர்எஸ் எம்எல்ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநில சட்டசபையில் ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மாநில ஆளுநர் நரசிம்மன் உரையாற்றினார்.

அப்போது தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்எல்ஏக்கள் ஆளுநர் உரையாற்றக் கூடாது என கூச்சலிட்டனர்.

அதேபோல தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் வேறு பிரச்சனைகளைக் கிளப்பி ஆளுநர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் சில எம்.எல்.ஏக்கள் கவர்னரிடமிருந்து உரையைப் பறித்து கிழிக்க முயற்சித்தனர். அதை அவைக் காவலர்கள் தடுத்து விட்டனர்.

இந் நிலையில் லோக்சத்தா கட்சி எம்.எல்.ஏ. ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது பாய்ந்த தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சி எம்.எல்.ஏக்கள் அவரை அடித்து உதைத்தனர். மற்ற எம்.எல்.ஏக்கள் அவர்களிடமிருந்து நாராயணனை காப்பாற்றினர்.

அதே போல காங்கிரஸ் எம்எம்எல் பலடுகு வெங்கட ராவுக்கும் அடி உதை விழுந்தது. மேலும் ஆளுநரையும் சில எம்எல்ஏக்கள் தாக்க முயன்றனர். இதையடுத்து அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டு ஆளுநருக்கு பாதுகாப்பு தரப்பட்டது.

அவர் அவரச அவசரமாக உரையை படித்து முடித்துவிட்டு வெளியேறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+