ஒரு வாரம் உண்ணாவிரதம்... தொடங்கினார் ஜெகன் மோகன்!

Subscribe to Oneindia Tamil

Jagan Mohan Reddy
ஹைதராபாத்: பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம் அளிக்க கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாத் தர வலியுறுத்தி ஜெகன் மோகன் ரெட்டி 7 நாள் உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினார்.

ஆந்திராவில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கட்டணம் அளிப்பதாக காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதன்படி, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி வரையிலான நிதியை மாநில அரசு அளிக்க வேண்டும்.

ஆனால், இதுவரை அளிக்கவில்லை. எனவே, குறைந்தபட்சம் 50 சதவீத தொகையான ரூ.3,500 கோடியை வழங்காவிட்டால் வருகிற 24-ந் தேதி முதல் கல்வி நிறுவனங்களை மூடப்போவதாக பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்வி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மாநில அரசோ ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வழங்க முன் வந்துள்ளது.

இந்த நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி ஜெகன் மோகன் ரெட்டி 7 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

ஹைதராபாத் இந்திரா பூங்கா அருகே நேற்று பிற்பகல் முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+