திண்டிவனம் ராமமூர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை!
மதுரை: தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் முன்னாள் எம்.பி. ராஜேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரான ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திண்டிவனம் ராமமூர்த்தியின் ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில் திண்டிவனம் ராமமூர்த்தி உண்மைக்கு புறம்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆய்வு செய்ய 21ம் தேதி டெல்லியில் தேசிய அளவிலான செயற் குழு கூட்டப்பட்டுள்ளது. அதில் தான் யாருடன் கூட்டணி அமைப்பது என்று தீர்மானிக்கப்படும்.
இந்நிலையில், தமிழகத்தில் கூட்டணி குறித்து திண்டிவனம் ராமமூர்த்தி எடுத்துள்ள நடவடிக்கை தவறானது. இதற்கு கட்சி தலைமை பொறுப்பாகாது.
எனவே, திண்டிவனம் ராமூர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது குறித்து கட்சியின் மேலிடத்துடன் கலந்து பேசி விரைவில் அறிவிக்க உள்ளேன் என்றார்.