அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி!

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றான பஹ்ரைனி்ல் பெரும்பான்மையாக ஷியா இன மக்கள் இருந்தாலும், அங்கு ஆட்சியதிகாரம் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் பரம்பரையிடம் உள்ளது.
இந் நிலையில் மன்னர் ஹமாத் அல் கலிபாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அங்குள்ள பியர்ல் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதையடுத்து அதை ஒடுக்க ராணுவம் இறக்கிவிடப்பட்டது.
இப்போது பியர்ல் சதுக்கத்தை ராணுவம் ஆக்கிரமித்தது. மேலும் ஆர்ப்பாட்டங்களுக்கும் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா, போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் எதிர்க் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு வர பியர்ல் துக்கத்தில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும். மன்னர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் நிபந்தனை விதித்தன. இருப்பினும் இன்று பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுவிட்டன.
முன்னதாக போராட்டம் செய்தவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கையின்றி துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் சிலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளுடன் நிஜ தோட்டாக்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருவதாக பிபிசி தெரிவித்தது. இந் நிலையில் போராட்டம் நடத்தும் மக்களை கொல்லும் போக்கை கைவிட்டு, ஜனநாயகரீதியில் அவர்களுடன் பேச்சு நடத்துமாறு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பஹ்ரைன் மன்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
நேற்று இளவரசர் ஷேக் சல்மானிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மக்கள் மீதான போலீசாரின் வன்முறைக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டனமும் தெரிவித்தார்.
இதையடுத்து பியர்ல் சதுக்கத்திலிருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு எதிர்க் கட்சிகள் ஒப்புக் கொண்டதால் அமைதியும் திரும்பியுள்ளது.
மொராக்கோவிலும் மக்கள் போராட்டம்:
அதே போல மொராக்கோவிலும் மன்னர் முகம்மதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதால், சில அதிகாரங்களை விட்டுத் தருவதாகவும், அரசியல் சீர்திருத்தங்கள் செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
10 நாடுகளில்...
மொத்தத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, மற்றும் வளைகுடா அரபு நாடுகளான ஜோர்டான், சிரியா, செளதி அரேபியா, ஏமன், பஹ்ரைன், ஈரான் ஆகிய 10 நாடுகளில் அரசுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் பரவி உள்ளது.
இதில் லிபியா, பஹ்ரைன், ஈரான், ஏமன், ஆகிய நாடுகளில் கலவரம் மோசமாக வெடித்துள்ளது. செளதி அரேபியாவில் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications