அடுத்தது பஹ்ரைன்....மன்னரை எதிர்த்து மக்கள் புரட்சி!

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றான பஹ்ரைனி்ல் பெரும்பான்மையாக ஷியா இன மக்கள் இருந்தாலும், அங்கு ஆட்சியதிகாரம் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் பரம்பரையிடம் உள்ளது.
இந் நிலையில் மன்னர் ஹமாத் அல் கலிபாவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அங்குள்ள பியர்ல் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதையடுத்து அதை ஒடுக்க ராணுவம் இறக்கிவிடப்பட்டது.
இப்போது பியர்ல் சதுக்கத்தை ராணுவம் ஆக்கிரமித்தது. மேலும் ஆர்ப்பாட்டங்களுக்கும் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலிபா, போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் எதிர்க் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு வர பியர்ல் துக்கத்தில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும். மன்னர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் நிபந்தனை விதித்தன. இருப்பினும் இன்று பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுவிட்டன.
முன்னதாக போராட்டம் செய்தவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கையின்றி துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் சிலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளுடன் நிஜ தோட்டாக்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருவதாக பிபிசி தெரிவித்தது. இந் நிலையில் போராட்டம் நடத்தும் மக்களை கொல்லும் போக்கை கைவிட்டு, ஜனநாயகரீதியில் அவர்களுடன் பேச்சு நடத்துமாறு அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பஹ்ரைன் மன்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
நேற்று இளவரசர் ஷேக் சல்மானிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மக்கள் மீதான போலீசாரின் வன்முறைக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டனமும் தெரிவித்தார்.
இதையடுத்து பியர்ல் சதுக்கத்திலிருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு எதிர்க் கட்சிகள் ஒப்புக் கொண்டதால் அமைதியும் திரும்பியுள்ளது.
மொராக்கோவிலும் மக்கள் போராட்டம்:
அதே போல மொராக்கோவிலும் மன்னர் முகம்மதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதால், சில அதிகாரங்களை விட்டுத் தருவதாகவும், அரசியல் சீர்திருத்தங்கள் செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
10 நாடுகளில்...
மொத்தத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, மற்றும் வளைகுடா அரபு நாடுகளான ஜோர்டான், சிரியா, செளதி அரேபியா, ஏமன், பஹ்ரைன், ஈரான் ஆகிய 10 நாடுகளில் அரசுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் பரவி உள்ளது.
இதில் லிபியா, பஹ்ரைன், ஈரான், ஏமன், ஆகிய நாடுகளில் கலவரம் மோசமாக வெடித்துள்ளது. செளதி அரேபியாவில் சிறிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
மண்டமேல இருந்த கொண்டைய மறந்த ஓபிஎஸ்.. கேட்ல இருந்த இரட்டை இலைய எடுத்தீங்களே! வீடு? விளாசிய விந்தியா! -
Election Exclusive: சினேகனுக்கு அடிச்சது யோகம்! எட்டைக் கை காட்டிய கமல்! இரட்டை விரலை தூக்கிய ஸ்டாலின்! மநீம பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications