80 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்-60 தர திமுக தயார்!

திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் நேற்று முதல் முறையாக சந்தி்த்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
திமுக குழுவில் துணை முதலமைச்சரும், பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் உயர்நிலை செயல் திட்ட குழு உறுபபினர் அமைச்சர் பொன்முடி ஆகியோரும் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
லண்டனில் சுற்றுப் பயணத்தில் இருந்த ஸ்டாலின் சென்னை திரும்பியதையடுத்து நேற்று இந்தக் குழுவினர் சந்தித்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் மாலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் காந்தி 30+30+30 என்ற பார்முலாப்படி 90 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மாநில அரசியல் நிலைமை, பிற கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்களை மனதில் கொண்டு 80 இடங்களை காங்கிரஸ் நிச்சயம் எதிர்பார்ப்பதாகவும் திமுகவிடம் காங்கிரஸ் ஐவர் குழு கோரியது.
மேலும் ஆட்சியில் பங்குபெறவும் காங்கிரஸ் விரும்புவதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.
ஆனால், காங்கிரசுக்கு 60 இடங்கள் வரை தர தயாராக இருப்பதாக திமுக குழுவினர் தெரிவித்ததாகத் தெரிகிறது. ஆட்சியில் பங்கு குறித்து தேர்தலுக்குப் பின் பேசலாம் என்றும் அவர்களிடம் திமுக கூறியதாகத் தெரிகிறது.
ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி வேண்டாம் என்ற நிலையில் உள்ள வாசன் தரப்பு, ஆட்சியில் பங்கு கோர வேண்டும், அதிக இடங்கள் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் கட்சித் தரப்பில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற விருப்பதைத் தெரிவித்துள்ளோம். பேச்சு விவரங்களை இரு கட்சிகளின் மேலிடங்களுக்கும் தெரிவிப்போம். அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, ஓரிரு நாள்களில் இரண்டாம் கட்டப் பேச்சு நடக்கும் என்றார்.
மு.க.ஸ்டாலின் கூறுகையில், பேச்சுவார்த்தை சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஓரிரு நாளில் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு எட்டப்படும் என்றார்.
அடுத்த சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழகம் வந்து முதல்வருடன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியில் பங்கு-சோனியா முடிவு செய்வார்-வாசன்:
இந் நிலையில் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் பேசிய வாசன், கடந்த 2004ம் ஆண்டில் தொடங்கி, மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்கள் எனப் பல தேர்தல்களை வெற்றிகரமாகச் சந்தித்து வரும் கூட்டணி திமுக-காங்கிரஸ் கூட்டணி.
கட்சியின் அகில இந்தியத் தலைமை மற்றும் மாநிலத் தலைமை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் யூகங்களுக்கே இடமில்லை.
தமிழகத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்திதான் முடிவு செய்வார். தமிழகத்தைக் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பல்வேறு வகையான நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. இதைத்தான் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய பலமாக கருதுகிறோம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தைப் பொருத்தவரை அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆகையால், அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications