ஜேபிசியில் அதிமுக உள்பட 20 கட்சிகளுக்கு இடம் கிடைக்காது?
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் (ஜேபிசி) அதிமுக உள்பட 20 கட்சிகளுக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது.
ஜேபிசி அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று லோக்சபாவில் அறிவித்தார். இதையடுத்து இதுதொடர்பான தீர்மானம் நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படவுள்ளது. அது நிறைவேற்றப்பட்டவுடன், ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் ஜேபிசி அமைக்கப்படும்.
தற்போதைய விதிமுறைப்படி ஜேபிசியில் 21 உறுப்பினர்கள் வரை இடம் பெறலாம். ஆனால் அதை 30 பேராக உயர்த்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்காது என்று தெரிகிறது.
21 பேரில் 14 பேர் லோக்சபாவைச் சேர்ந்தவர்களாகவும், 7 பேர் ராஜ்யசபாவைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.
தற்போது நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 37 கட்சிகளுக்குப் பிரதிநிதிகள் உள்ளனர். ஆனால் அனைவருக்கும் உறுப்பினர் வாய்ப்பு கிடைத்து விடாது. கட்சிகளின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில்தான் உறுப்பினர் வாய்ப்பு கிடைக்கும்.
அந்த வகையில் பார்த்தால், காங்கிரஸ், பாஜக, திமுக, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இந்தக் கட்சிகளில் காங்கிரஸ் தவிர, திமுக, தேசியவாத காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ் ஆகியவை காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளவையாகும். அதாவது மொத்தம் உள்ள 7 கட்சிகளில் நான்கு கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள். மற்ற 3 பேரும் எதிர்க்கட்சியினர். அவர்களிலும், சமாஜ்வாடி கட்சியை ஏதாவது ஒரு வகையில் காங்கிரஸ் தனக்கு சாதகமாக வளைக்கக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே இந்த ஜேபிசி குழுவின் விசாரணையால் காங்கிரஸுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது.
அடுத்து ஜேபிசியின் தலைவராக சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு மிக மிக பாத்திரமான கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பி.சி. சாக்கோ நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர், தீவிர சோனியா விசுவாசி. எனவே இவரையே தலைவராக நியமிக்க சோனியா பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே எதற்கும் பாதகம் இல்லாத வகையில், இவர் செயல்படலாம் என்று காங்கிரஸ் தரப்பு நம்புகிறது.
ராஜ்யசபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன், ஜேபிசி அமைக்கப்பட்டு அதன் தலைவர், உறுப்பினர்கள் விவரம் தெரிய வரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications