26ல் பெரம்பலூரில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு - இந்திய ஜனநாயக கட்சி
பெரம்பலூர்: இந்திய ஜனநாயக கட்சி சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு பெரம்பலூர் ரோவர் விவசாயக் கல்லூரி அருகே வரும் 26- ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலர் எஸ். சண்முகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரமும், வாங்கும் சக்தியும் நாளுக்குநாள் குறைந்து கொண்டே தான் போகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது என்பது சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது.
இயற்கை வளமிக்க இந்தியாவில் விளையக்கூடிய பொருள்களைகூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்த நிலைமையை மாற்றவும், விவசாயத்தை பாதுகாக்கவும் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வரும் 26-ம் தேதி பெரம்பலூரில் நடக்கிறது. இதற்கு கட்சி நிறுவனர் டாக்டர் ஆர். பச்சமுத்து தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டில் அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி. செங்கால்ரெட்டி மற்றும் தமிழக விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications