அதிமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு அதிருப்தி-பார்வர்ட் பிளாக்கில் போர்க்கொடி
சென்னை: அதிமுக கூட்டணியில் தங்களது கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே ஒதுக்கியதற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் அதிருப்தி வெடித்துள்ளது. தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என கட்சியின் ஒரு பிரிவு அறிவித்துள்ளதால் கட்சி பிளவுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு ஜெயலலிதா ஒரு சீட் ஒதுக்கியுள்ளார். இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
அதில் பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசியச் செயலாளரும் மேற்குவங்க மாநில விவசாயத்து துறை அமைச்சருமானர் நரேந்திரநாத் தே, ஜெயலலிதா ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். அப்போது கட்சியின் தேசியச் செயலாளர் தேவராஜன், மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தேவராஜன் கூறுகையில், தமிழ்நாட்டில் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு அணியை வலுப்படுத்தும் வகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் சேர்ந்து போட்டியிடுவது என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினோம்.
இந்தத் தேர்தலில் அதிமுக அணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கம் சின்னத்தில் எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்றார் தேவராஜன்.
உசிலம்பட்டி தொகுதியில்...
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில்தான் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகிறது. எனவே, இந்தத் தேர்தலிலும் தங்கள் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் பார்வர்டு பிளாக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு சீட் மட்டும் தரப்பட்டதற்கு அந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சீட்டுக்காக ஒப்பந்தம் போடுவதா என்று கட்சியின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மாயாண்டி ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஒரு சீட் தருவதை தங்களால் ஏற்க முடியாது என்றும், தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பார்வர்ட் பிளாக் கட்சி பிளவு படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இக்கட்சியின் தலைவராக நடிகர் கார்த்திக் பதவி வகித்துள்ளார். ஆனால் அவரும் பின்னர் அதிருப்திக்குள்ளாகி, கட்சியை விட்டு நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். அதன் பிறகுதான் அவர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை ஆரம்பித்தார். தற்போது கார்த்திக்கும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications