அதிமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு அதிருப்தி-பார்வர்ட் பிளாக்கில் போர்க்கொடி
சென்னை: அதிமுக கூட்டணியில் தங்களது கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே ஒதுக்கியதற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் அதிருப்தி வெடித்துள்ளது. தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என கட்சியின் ஒரு பிரிவு அறிவித்துள்ளதால் கட்சி பிளவுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு ஜெயலலிதா ஒரு சீட் ஒதுக்கியுள்ளார். இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
அதில் பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசியச் செயலாளரும் மேற்குவங்க மாநில விவசாயத்து துறை அமைச்சருமானர் நரேந்திரநாத் தே, ஜெயலலிதா ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். அப்போது கட்சியின் தேசியச் செயலாளர் தேவராஜன், மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தேவராஜன் கூறுகையில், தமிழ்நாட்டில் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு அணியை வலுப்படுத்தும் வகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான அணியில் சேர்ந்து போட்டியிடுவது என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினோம்.
இந்தத் தேர்தலில் அதிமுக அணியில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கம் சின்னத்தில் எங்கள் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்றார் தேவராஜன்.
உசிலம்பட்டி தொகுதியில்...
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில்தான் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தொடர்ச்சியாக போட்டியிட்டு வருகிறது. எனவே, இந்தத் தேர்தலிலும் தங்கள் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவிடம் பார்வர்டு பிளாக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு சீட் மட்டும் தரப்பட்டதற்கு அந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சீட்டுக்காக ஒப்பந்தம் போடுவதா என்று கட்சியின் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் மாயாண்டி ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஒரு சீட் தருவதை தங்களால் ஏற்க முடியாது என்றும், தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பார்வர்ட் பிளாக் கட்சி பிளவு படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இக்கட்சியின் தலைவராக நடிகர் கார்த்திக் பதவி வகித்துள்ளார். ஆனால் அவரும் பின்னர் அதிருப்திக்குள்ளாகி, கட்சியை விட்டு நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். அதன் பிறகுதான் அவர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை ஆரம்பித்தார். தற்போது கார்த்திக்கும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications