சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில், சென்டிரல் ரயில் நிலையத்தில் இன்று பிற்பகல் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் படையினர், மோப்ப நாய்கள் சகிதம், போலீஸார் விரைந்தனர். சென்டிரல் ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரயில்கள், பயணிகளின் உடமைகள், தண்டவாளங்கள் என தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையால் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு தகவல் புரளி என்று தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications