கோழிக்கோடு குண்டு வெடிப்பு : கலவரத்தை தூண்ட காங் போ்ட்ட சதி-அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலுக்கு முன் கலவரத்தை தூண்ட காங்கிரஸ் கூட்டணி போட்ட சதி திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கோழிக்கோடு குண்டு வெடிப்பு குறி்த்து முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நாதாபுரத்தை அடுத்த நரிக்காட்டேரி பகுதியில் கடந்த சில தினங்களாக முஸ்லீம் அமைப்பை சேர்ந்த இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் நரிக்காட்டேரி பகுதியில் தனியாக உள்ள ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. பயங்கர சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது அந்த வீ்ட்டுக்கு வெளியே 3 பேர் உடல் சிதறி பிணமாகி கிடந்தனர். 9 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர்.
உடனே அவர்களை கோழிக்கோட்டில் உள்ள பல்வேறுதனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 2 பேர் நேற்று காலை இறந்தனர். ரபீக், சமீர், ரியாஸ், ஷபீர், சபீர் ஆகியோரே இறந்தவர்கள். மேலும் 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 3 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குண்டு வெடிப்பு குறித்து தகவல் அறிந்ததும் கோழிக்கோடு எஸ்பி நீலேஷ்குமார் மற்றும் நாதாபுரம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர்கள் அனைவரும் முஸ்லீம் லீக் கட்சியை சேர்நதவர்கள் என்பதும், வீட்டில் வெடிகுண்டு தயாரித்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது குண்டுகள் வெடித்ததும் தெரிய வந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 500 ரூபாய் கட்டு ஒன்றையும், ரூ. 9 லட்சத்துகான காசோலையும், ஏராளமான சி்ம் கார்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். மேலும், அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வெடிப்பொருட்களையும் கைப்பற்றினர்.
குண்டு வெடிப்பு நடந்த நரிக்காட்டேரியில் பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறுகையில், சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கேரளாவில் கலவரத்தை தூண்ட காங்கிரஸ் கூட்டணி போட்ட சதி திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்காக எதிர்கட்சி தலைவர் உம்மன்சாண்டி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications