For Daily Alerts
Just In
பீகாரில் பள்ளி உள்பட 3 அரசாங்க கட்டிடங்களை தரைமட்டமாக்கிய மாவோயிஸ்ட்கள்
ஜாமுய்: பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டத்தில் உள்ள 2 அடுக்குமாடி பள்ளி உள்பட 3 அரசாங்க கட்டிடங்களை மாவோயிஸ்ட்கள் நேற்றிரவு இடித்துத் தள்ளியதாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்றிரவு கராய் கிராமத்திற்குள் நுழைந்த வாவோயிஸ்ட்கள் அங்கு மகாதலித் சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான பள்ளியை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான ஜேபிசி இயந்திரத்தை வைத்து இடித்து தரைமட்டமாக்கினர்.
மேலும், அதன் அருகில் இருந்த பாசனத்துறை கட்டிடத்தையும், நீர்வளத்துறை கட்டிடத்தையும் இடித்துத் தள்ளினர். மூன்று கட்டிடங்களையும் தரைமட்டமாக்கிவிட்டு காட்டுக்குள் தப்பியோடிவிட்டனர்.
Comments
English summary
Maoists entered Garaih village of Bihar's Jamui district lastnight and bulldozed a two storied school, office building of irrigation department and an inspection bungalow of water resources department. They completely demolished the 3 government buildings and escaped into the jungle.
Story first published: Wednesday, March 2, 2011, 11:34 [IST]