தெலுங்கானா விவகாரத்தால் பெரும் அமளி-நாடாளுமன்றம் முடங்கியது

ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக முடங்கிப் போய் பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்கிய நாடாளுமன்றம் தற்போது தெலுங்கானா விவகாரத்தால் பெரும் அமளிகளைச் சந்தித்து வருகிறது.
இன்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும், பாஜகவினரும் பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது. இவர்களுடன் தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டதால் நாடாளுமன்றத்தில் ஒரு அலுவலையும் நடத்த முடியவில்லை.
இன்று மட்டும் மொத்தம் 6 முறை லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக 3.15 மணிக்குக் கூடிய லோக்சபாவை நாள் முழுமைக்கும் சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார்.
ராஜ்யசபாவிலும் இன்று தெலுங்கானா விவகாரம் பெரும் அமளியை ஏற்படுத்தியது.
லோக்சபாவில் இன்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவும், நடிகை விஜயசாந்தியும் போராட்டத்திற்கு தலைமை தாங்கினர். இருவரு்ம் சபாநாயகர் இருக்கை முன்பு நின்றபடி ஆவேசமாக கோஷமிட்டனர்.
ஜெய் தெலுங்கானா, தெலுங்கானா தனி மாநிலம் தேவை என்றும் கூறி அவர்கள் கோஷமிட்டதால் அவையே பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications