காங். இல்லை, இப்போது வாருங்கள்-கம்யூ. கட்சிகளுக்கு திருமா அழைப்பு

இதுகுறித்து அவர் கூறுகையில்,
மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகி இருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தி.மு.க.வின் பலம் பல மடங்கு அதிகரிக்கும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டாலும், வேறு அணியில் சேர்ந்து போட்டியிட்டாலும் அது தி.மு.க. அணியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்தாது. காங்கிரஸ் இல்லாததால் தி.மு.க.வுக்கு கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.
தி.மு.க. அணியில் காங்கிரஸ் இடம் பெற்றதால் தான் இடதுசாரி கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு சென்றன. இப்போது காங்கிரஸ் இல்லாததால் தி.மு.க. அணிக்கு இடதுசாரி கட்சிகள் வருவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. எனவே அவர்கள் தி.மு.க. அணிக்கு திரும்பி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
காங்கிரஸ் இல்லாததால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமா என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை. அதற்கான நேரமும் இதுவல்ல என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications