தஞசையில் ஆலுக்காஸ் நகைக் கடைகள் மீது தாக்குதல்
தஞ்சாவூர்: கேரளாவைச் சேர்ந்த ஆலுக்காஸ் நகைக் கடைகள் மீது தஞ்சையில் தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
மலையாளிகள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர், தமிழகத்தில் தமிழர்களின் தொழில்களையும், வணிகத்தையும் பறித்து வருகின்றனர். இதனால் தமிழர்கள் வேலைவாய்ப்பிழந்து வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்று தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கூறியிருந்தார்.
அதன்படி இன்று தஞ்சையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடை முன்பு கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் பழ. ராஜேந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
ஆனால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும் தடையை மீறி கோஷமிட்டபடி போராட்டக்காரர்கள் கடையை நோக்கி முன்னேறினர். பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பிரான்சிஸ் ஆலுக்காஸ் கடை மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் கடையின் கண்ணாடிகள் உடைந்தன. இந்த நிலையில் இன்னொரு குழுவினர் ஜோஸ் ஆலுக்காஸ் கடைக்கு விரைந்து சென்று அங்கு மறியல் செய்ய முயன்றனர். அவர்களையும் போலீஸார் தடுத்து கைது செய்தனர். மொத்தமாக 800 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications