சீன நிலநடுக்கத்தில் 14 பேர் பலி, 135 பேர் காயம்: பல வீடுகள் சேதம்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: இன்று மியான்மர் எல்லையையொட்டிய தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் உயிர் இழந்தனர், 135 பேர் காயம் அடைந்தனர்.
தென்மேற்கு சீனாவில் இன்று பிற்பகல் 12. 38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 14 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், 135 பேர் காயம் அடைந்துள்ளதாகவும இங்ஜியாங் கவுன்ட்டியில் உள்ள உள்ளூர் பூகம்ப நிவாரண தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் அம்மாநில தொலைக்காட்சி 200 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியதாக ஜிங்வா நியூஸ் ஏஜென்சி தெரிவித்தது.












Click it and Unblock the Notifications