For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன நிலநடுக்கத்தில் 14 பேர் பலி, 135 பேர் காயம்: பல வீடுகள் சேதம்

By Siva
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இன்று மியான்மர் எல்லையையொட்டிய தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் உயிர் இழந்தனர், 135 பேர் காயம் அடைந்தனர்.

தென்மேற்கு சீனாவில் இன்று பிற்பகல் 12. 38 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 14 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், 135 பேர் காயம் அடைந்துள்ளதாகவும இங்ஜியாங் கவுன்ட்டியில் உள்ள உள்ளூர் பூகம்ப நிவாரண தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் அம்மாநில தொலைக்காட்சி 200 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியதாக ஜிங்வா நியூஸ் ஏஜென்சி தெரிவித்தது.

English summary
An earthquake measuring 5.4 magnitude hit a remote area of southwest China near the Myanmar border today at 12.58 pm. 14 killed and 135 injured in this quake. Many houses collapsed in the tremor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X