வேட்பாளர் தேர்வு-தேமுதிக நேர்காணல் ஆரம்பம்
சென்னை: சட்டசபைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் தொடங்கியது.
கட்சியின் தலைவரான விஜய்காந்த் தலைமையிலான நிர்வாகிகள், விருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
முதல் தொகுதியாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. 3 நாட்கள் இந்த நேர்காணல் நடக்கும்.
இந்தக் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாமக சார்பில் போட்டியிட 6,203 பேர் விருப்ப மனு:
இதற்கிடையே பாமக சார்பில் போட்டியிட 6,201 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
கடந்த 3ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன. திண்டிவனம்
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் நா.ம.கருணாநிதி தலைமையில் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், இணை பொதுச் செயலாளர் இசக்கி படையாச்சி, உழவர் பேரியக்க தலைவர் சடகோபன் ஆகியோர் கொண்ட குழுவினர் விருப்ப மனுக்களை பெற்று வந்தனர்.
விருப்ப மனுக்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 6,203 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். வேளச்சேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பாமக இளைஞரணித் தலைவரான டாக்டர் அன்புமணி போட்டியிடக் கோரி பாமகவினர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அன்புமணியின் மனைவியும்
பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான செளம்யா செய்யாறு, புவனகிரி, செஞ்சி தொகுதிகளில் போட்டியிடக் கோரியும் பலர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
அதே போல ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சங்கத் தலைவர் குரு போட்டியிடக் கோரியும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications