For Daily Alerts
Just In
நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் துணிகரம்: கத்தி முனையில் பயணிகளிடம் ரூ. 2 லட்சம் கொள்ளை
ராய்ச்ச்சூர்: நாகர்கோவில் எக்பிரஸின் 3 பெட்டிகளில் உள்ள பயணிகளிடம் இருந்து கத்தி முனையில் சுமார் ரூ. 2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் எக்ஸ்பிர்ஸ் இன்று மதியம் கர்நாடக மாநிலம் வாதி மற்றும் கிருஷ்ணா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. மதியம் 1 மணி அளவில் வாதியில் இருந்து ரயிலில் 3 கொள்ளையர்கள் ஏறினர். அவர்கள் எஸ்1, எஸ்2 மற்றும் எஸ்3 பெட்டிகளில் புகுந்தனர். அந்தப் பெட்டிகளி்ல் சுமார் 25 பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
பொருளை பறிகொடுத்த ஜெகதீஷ் என்னும் பயணி ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.
Comments
English summary
25 passengers of Nagercoil express were robbed of nearly Rs. 2 lakh today by a three member gang. When the train was moving between Wadi and Krishna railway stations, the robbers looted money and valuables at knife point from the passengers of S1, S2 and S3 coaches.
Story first published: Friday, March 11, 2011, 16:05 [IST]