திமுகவிலிருந்து வெளியறிய புதிய பாரதம் 40 தொகுதிகளில் போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே ஒரு சீட் கொடுத்ததால் அதிருப்தி அடைந்து திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய புதிய பாரதம் கட்சி 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறியுள்ளது.

இதுகுறித்து கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முதல் தி.மு.க. கூட்டணியில் புரட்சி பாரதம் இணைந்து செயல்பட்டு வருகிறது. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கள் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டேன். எல்லா தேர்தலிலும் தி.மு.க.வின் வெற்றிக்கு நாங்கள் உதவி செய்தோம். 2009 எம்.பி. தேர்தலில் சீட்டு கேட்டோம். சட்டசபை தேர்தலில் தருவதாக கூறினார்கள். உள்ளாட்சி மன்ற தேர்தலில் பிரதிநிதித்துவம் கேட்டோம். திருவாலங்காடு ஒன்றிய தலைவர் பதவிக்கு இடம் தந்தார்கள். பின்னர் அந்த இடத்தையும் பிடுங்கி கொண்டனர். இடம் ஒதுக்கவில்லை.

சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பி 8 தொகுதிகள் பட்டியலை கொடுத்து அதில் 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றோம். ஒரு தொகுதி மட்டும் தருவதாக கூறினார்கள். மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவர்கள் முடியாது என்றதால் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று முடிவு செய்தோம்.

பலத்தை காட்ட 40 தொகுதிகளில் புரட்சி பாரதம் தனித்து போட்டியிடும். பூந்தமல்லி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். இரண்டொரு நாளில் 40 தொகுதி வேட்பாளர்களையும் அறிவிப்போம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+