காமன்வெல்த் ஊழல் விவகாரம்: கல்மாடியிடம் இன்று சிபிஐ விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காமன்வெல்த் ஊழல் தொடர்பாக அதன் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கல்மாடியிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்தியது.
காமன்வெல்த் போட்டிகள் ஊழலால் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தி, கைது செய்துள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கல்மாடியிடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தான் சிபிஐ கல்மாடியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து கடந்த ஜனவரியில் கல்மாடியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது இன்று மீண்டும் விசாரித்தது.












Click it and Unblock the Notifications