சட்டசபை தேர்தல்: அதிமுகவுக்கு பிராமணர் சங்கம் ஆதரவு
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அப்போது வரும் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
பிராமணர் ஓட்டு வங்கி அதிமுள்ள மைலாப்பூர், தியாகராயநகர், விருகம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், அம்பத்தூர், ஸ்ரீரங்கம், மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் அதிகமுகவில் இருக்கும் பிராமணர்களுக்கு வாய்ப்பளிப்பது, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு சலுகைகள், கோவில் அர்ச்சகர்கள்(குருக்கள், பட்டாச்சாரியார்கள்) சமையல் கலைஞர்கள், வைதீக காரியங்கள் நடத்தும் சாஸ்திரிகள், வேத விற்பன்னர்கள் ஆகியோருக்கு தனி நலவாரியம் அமைப்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications