நாடாளும் மக்கள் கட்சி 30 தொகுதிகளில் போட்டி: வேட்பாளர்களை அறிவிக்கிறார் கார்த்திக்
இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் கார்த்திக்.
இதுதொடர்பாக இந்தக் கட்சியின் தலைவர் கார்த்திக் இன்று அளித்த பேட்டி:
"வரும் தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்கள் நிறுத்த முடிவு செய்துள்ளோம். தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
விண்ணப்பங்களுக்கு கட்டணம் வாங்கவில்லை. இலவசம்தான். நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடவிருக்கிறேன்.
அதன் பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். இந்தத் தேர்தலில் நானும் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இந்த அறிக்கையை பொதுமக்கள் ஏராளமானோர் பாராட்டுகின்றனர். அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேச்சு நடத்த மாட்டோம். அது முடிந்துபோன சமாச்சாரம். எனது வருத்தமெல்லாம், இனி 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என்பதுதான்," என்றார்.













Click it and Unblock the Notifications