For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மார்ச் 23ல் கருணாநிதி பிரசாரம் தொடக்கம்-திருவாரூர், திருச்சி, தஞ்சையில் பேசுகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தை தான் போட்டியிடும் திருவாரூரில் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறார். திருவாரூரிலும், பின்னர் தஞ்சை, திருச்சியிலும் அவர் பேசுகிறார்.

திருவாரூரில் 23ம் தேதி மாலை 6 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்குகிறார் கருணாநிதி. அன்று நடைபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

24ம் தேதி முற்பகல் 11 மணிக்கு தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார் கருணாநிதி.

பின்னர் அன்று மாலை தஞ்சையில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

25-ந்தேதி மாலை 6 மணிக்கு திருச்சியில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கருணாநிதி பேசுவார் என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

கருணாநிதியின் அடுத்த கட்ட பிரசாரத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் திமுக தெரிவித்துள்ளது.

English summary
Chief Minister M. Karunanidhi will kick-start his election campaign on March 23 from his home turf Tiruvarur and file his nomination papers to contest from there the next day. Karunanidhi will address three public meetings at Tiruvarur (March 23), Thanjavur (Mar24) and Tiruchirappalli (Mar25).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X