நெல்லையில் 2 தொகுதிகளைக் கேட்கும் தேமுதிக-தருமா அதிமுக?
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், ராதாபுரம், ஆலங்குளம் ஆகிய 3 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளாவது வேண்டும் என்று தேமுதிக எதிர்பார்க்கிறது. இதில் எந்த தொகுதி கிடைக்கும் என இன்று தெரிய வரும்.
நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், ஆலங்குளம், ராதாபுரம் ஆகிய தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை கேட்கிறது தேமுதிக.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் பத்து தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே சமகவுக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கியுள்ள நிலையில் தேமுதிக 2 தொகுதிகளை கேட்பது அதிமுகவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒதுககினால் மாவட்டத்தில் எஞ்சியுள்ள 5 தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். மேலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 4 பேர் போட்டியிலிருந்து விலகும் நிலை ஏற்படும். இது தொண்டர்களை சோர்வடைய செய்யும் என்றும் அதிமுக தரப்பு கருதுகின்றது.
இதனால் நெல்லை மாவட்டத்தில் தேமுதிகவுக்கு ஒரு தொகுதி தர முன்வருவதாகவும், ஆனால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று விஜயகாந்த் தேமுதிக பட்டியலை அறிவிக்கும்போது இந்தக் குழப்பத்திற்கு தீர்வு தெரிய வரும்.












Click it and Unblock the Notifications