தென்காசியி்ல் சரத்குமார், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி

இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தென்காசி, நாங்குநேரி தொகுதிகளில் அகில இந்திய சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது.
கட்சியின் உயர் நிலைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தென்காசியில் நானும் (சரத்குமார்), நாங்குநேரியில் கட்சியின் தலைவர் ஏ. நாராயணனும் போட்டியிட இருக்கிறோம்.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பாடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.
முதல் முறையாக போட்டியிடும் சரத்
56 வயதாகும் சரத்குமார் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். கடந்த 1996ம் ஆண்டு அவர் திமுகவில் இணைந்தார். அக்கட்சி சார்பில் 1998ம் ஆண்டு எம்.பி தேர்தலில் நெல்லையில் போட்டியிட்டுத் தோற்றார்.
பின்னர் 2002ல் அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2006ம் ஆண்டு திமுகவுடன் ஏற்பட்ட கசப்பால் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார். ஆனால் சேர்ந்த வேகத்தில் விலகிய அவர் 2007ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார்.
2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டார். அதில் அவரது கட்சி அத்தனை இடங்களிலும் டெபாசிட்டைப் பறி கொடுத்தது. மேலும், எந்தக் கட்சியின் வெற்றிக்கும் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
சரத்குமார் இதுவரை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதே இல்லை. மேலும் சட்டசபைத் தேர்தலிலும் இதுவரை அவர் போட்டியிட்டதில்லை. இப்போதுதான் முதல் முறையாக, அதுவும் கட்சி ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக போட்டியிடுகிறார். அதிமுகவின் பலத்துடன் அவர் வெல்லலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சியில் நிலவுகிறது.
ஆனால் அவருக்கு எதிராக ஒட்டுமொத்த நாடார் சமுதாய அமைப்புகளும் திரண்டு நிற்பதால் சரத்குமாருக்கு தென்காசியில் பெரும் மல்லுக்கட்டு காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications