விஜயகாந்த்துக்கு தெரிந்த்து வைகோவுக்கு தெரியவில்லையே!- சுப.வீரபாண்டியன்

திருவாரூர் தெற்கு ரதவீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே நடந்த தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது:
திமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது அனைவரும் மகிழ்ந்தார்கள். ஆனால் அதிமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, கூட்டணியில் இருந்த அத்தனைபேரும் அதிர்ந்தார்கள். அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதும், தேமுதிக அதிர்ச்சி, சிபிஐ அதிர்சசி, சிபிஎம் அதிர்ச்சி என்று செய்திகள் வெளியாகின.
சரியாக சொல்லவேண்டும் என்றால் திமுக கூட்டணி, மகிழ்ச்சி கூட்டணி. அந்த கூட்டணி அதிர்ச்சி கூட்டணி.
உடனே நான் நம்பினேன், 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணிலே காலூன்றி இருக்கிற பொதுவுடைமை கட்சி தலைமை ஏற்று மூன்றாவது அணியை அமைக்கும் என்று. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், 8 ஆண்டுகள் கூட ஆகாமல் இருக்கிற ஒரு கட்சியிடம் போய், நீங்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று கோயம்பேட்டுக்கு நடையாய் நடந்தார்கள்.
கோயம்பேட்டில் என்ன செய்தார்கள் என்றால், அந்த அம்மாவுடைய உருவபொம்மையில் ஒரு பச்சை சேலையை உடுத்தி, அதற்கு மேல் நான் சொல்லுவது நாகரீகமாக இருக்காது. அவ்வளவு அநாகரிகமும் அளங்கோலமும் நடந்து முடிந்த பின்னர், அந்த அம்மா அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
நான் என்ன நினைக்கிறேன் என்றால், அரசியலுக்கு புதிதாக வந்தாலும் கோயம்பேட்டுக்காரருக்கு சரியாக புரிகிறது. என்ன செய்தால் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார் என்று தெரிகிறது. பாவம் நெடுக்காலமாக அரசியலிலே இருக்கும் பழுத்த அரசியல்வாதி அண்ணன் வைகோவுக்கு இது தெரியவில்லை. எனவே திமுக கூட்டணி வெற்றி கூட்டணி.
திமுக தேர்தல் அறிக்கை...
திமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கிறது என்று ஒரு நண்பர் கேட்டார். எதிர் அணியினருக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து தூள் தூளாக ஆக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.
இது ஒரு புதிய போக்கு. பொதுவாக தேர்தல் நேரம் என்றால், கூட்டணியிலே எந்தெந்த கட்சியினர் இருக்கிறார்கள். எந்த கட்சிக்கு எந்த தொகுதி. எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் என்பதை அறிந்துகொள்பதிலேதான் மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
ஆனால் இப்போதுதெல்லாம் திமுக தேர்தல் அறிக்கை எப்போது வருகிறது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு மக்களிடையே பெரும் ஆர்வம் இருக்கிறது.
பொதுவாக சொல்லவேண்டுமானால் இந்த தேர்தல் அறிக்கையை நிதிநிலை அறிக்கையாக மக்கள் பார்க்கிறார்கள். வெறும் தேர்தல் அறிக்கை அல்ல. அரசு வெளியிட்டுள்ள ஆணை என்று மக்கள் பார்க்கிறார்கள். நம்பிக்கை கொடுக்கிற அளவுக்கு தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது", என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications