For Daily Alerts
Just In
ஏர் இந்தியாவுக்கு பெட்ரோல் தர எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு!!
இனி தினமும் பெட்ரோல் கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே, எரிபொருள் தர முடியும் என உறுதியாக நிற்கின்றன இந்த நிறுவனங்கள்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒரு நாள் பெட்ரோல் பில் ரூ 18.5 கோடி. இதுவரை அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா வைத்துள்ள கடன் மட்டும் ரூ 2400 கோடி.
ஏற்கெனவே நஷ்டத்தில் தவிக்கும் தங்களால், ஏர் இந்தியாவின் இந்தக் கடன் சுமையையும் தாங்க முடியாது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து விவகாரம், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் வயலார் ரவியிடம் சென்றுள்ளது. இந்த விஷயத்தை பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டியுடன் பேசி முடிவெடுப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
Comments
English summary
Keeping cash-strapped Air India airborne is now proving to be an uphill task for the government. Almost four months after putting it on cash-and-carry, oil marketing PSUs have warned that jet fuel supply to the Maharaja could soon be stopped unless their daily bill is cleared in full.
Story first published: Friday, March 25, 2011, 11:57 [IST]