For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது: மு.க. அழகிரி தாக்கு

By Siva
Google Oneindia Tamil News

மதுரை: ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரையில் மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பொதுக் கூட்டங்களில் மற்றவர்கள் பேசுவதையும், எழுதித் தருவதையும் காப்பி அடித்து பேசுவது ஜெயலலிதாவின் வழக்கமாக இருந்து வருகிறது.

அதே போன்று, திமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து அவர் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் இருந்தே அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

அவரைப் பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் உடனடியாக ரத்து செய்துவிடுவார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.

English summary
Central minister M.K. Azhagiri has told that ADMK chief Jayalalitha is scared that she will lose the elections. She doesn't have originality and copies other's works. ADMK's election manifesto is the best example for this, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X