தேர்தல் பணிகளில் அரசியல் கைதிகளை ஈடுபடுத்தும் அழகிரி: சாமி புகார்
சென்னை: சிறையில் இருந்து விடுதலையான அரசியல் கைதிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.இக்பால் முன்பு ஆஜராகி மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பற்றி புகார் அளித்துள்ளார் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி. கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஆயிரத்து 405 கைதிகள் தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிக்கப்பட்டனர். இதில் அரசியல் கைதிகளும் அடக்கம்.
இதை எதிர்த்து நான் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் விடுதலையான அரசியல் கைதிகள் யாரும் அரசியல் பணியில் ஈடுபடக்கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் தோல்வி பயத்தால் இந்த உத்தரவை மீறி தென் மாவட்டங்களில் அரசியல் கைதிகளை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்.
அவர்கள் என்னவென்றால் எங்கள் கட்சி வேட்பாளர்களை மிரட்டுகின்றனர். எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்துமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
அப்போது அரசு தரப்பில் வக்கீல் ராஜா கலிபுல்லா ஆஜராகி இடைக்கால உத்தரவு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு இந்த வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
பின்னர் நிருபர்களிடம் சாமி கூறியதாவது,
தென் மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளிலும் தோற்றுவிடுவோமோ என்று திமுக பயப்படுகிறது. அதனால் தான் விடுதலையான அரசியல் கைதிகளை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், ஏர்டெல் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளது. சிபிஐ விசாரணை திருப்திகரமாக உள்ளது என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications