தேர்தல் ஆணைய வாகன சோதனைக்கு தடை விதிக்க முடியாது-உயர்நீதிமன்றம்
சென்னை: தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியது முதல் தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமான நடவடிக்கை வாகன சோதனை.
தமிழகம் முழுவதும் வாகனங்களை தேர்தல் அலுவலர்களும், போலீஸ் படையினரும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு அதில் பணம், பொருள் இருக்கிறதா என்பதை சோதனையிட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதேபோல வங்கியிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு அதுவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கடும் கெடுபிடி சோதனை காரணமாக பெரும் குழப்பமும், அமளி துமளியும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளை தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை சேர்த்து விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தேர்தலை நேர்மையாக நடத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க முடியாது. தேர்தலை நேர்மையாக நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
பணம், பொருள் உள்ளிட்டவற்றுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் அவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications