தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் வருத்தப்படுவார்-எஸ்.வி.சேகர்
தஞ்சை: காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க முனைப்போடு இருக்கும் சீமானுக்கு திமுக, பாமக வேட்பாளர்களை எதிர்க்க தைரியம் இருக்கிறதா என்று நடிகர் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் எஸ்.வி. சேகர் தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது,
காங்கிரஸ் சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளிக்காததில் கவலை இல்லை. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக தேர்தலுக்கு பின் தங்கபாலு நிச்சயம் வருத்தப்படுவார். ஒரு கட்சித் தலைவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு சிறந்த முன்உதாரணம் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு. சூழ்ச்சி வென்றதாக வரலாறே இல்லை. தங்கபாலுவுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு உள்ளது. அவர் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடலாம்.
காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிப்போம் என்று கூறும் சினிமா இயக்குனர் சீமானுக்கு திமுக அல்லது பாமக வேட்பாளர்களை தோற்கடிப்போம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே சீமான் தான் சிங்கள பெண் பூஜாவை நாயகியாக வைத்து தம்பி என்ற படத்தை எடுத்தார். அப்போது அவரது தமிழ் உணர்வு எங்கே போனது? என்றார்.












Click it and Unblock the Notifications