முரசு சின்னம் பதித்த துணிகளை மொத்தமாக விற்க உயர்நீதிமன்றம் தடை
சென்னை: முரசு சின்னம் பதிக்கப்பட்ட ஜவுளித் துணிகளை மொத்தமாக விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருப்பூர் வல்லம் பாரதிநகரைச் சேர்ந்த முரளிமோகன் என்ற தொழிலதிபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:
நான் பின்னலாடை தயாரிக்கும் தொழிலில் இருக்கிறேன். நான் தயாரிக்கும் பனியன் உள்ளிட்ட ஆடைகளில் முரசு சின்னம் பதிக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சின்னத்துக்கு நான் காப்புரிமை பெற்றுள்ளேன்.
இந்த நிலையில் தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. தேர்தல் கமிஷனின் கெடுபிடியாக நடவடிக்கைக்கு மத்தியில், இந்த முரசு சின்னத்தை நான் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. இதனால் எனது தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்படும்.
தேர்தல் கமிஷனின் நடவடிக்கையால் தொழில் செய்யும் உரிமை பாதிக்கப்படுகிறது. தேர்தல் முடியும்வரை முரசு சின்னத்தை தே.மு.தி.க. மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது தொழிலை பாதிக்கக் கூடியதாக உள்ளது. சின்னம் இல்லாமல் துணியை விற்பனை செய்ய முடியாது.
எனவே எனது தொழிலை பாதுகாப்பது பற்றி தேர்தல் கமிஷனுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் எழுதினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுபற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் முரளிமோகன்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பின்னர் பிறப்பித்த உத்தரவில்,
முரசு சின்னத்தை குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அளிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இதுபோன்ற சின்னங்களை அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்குவதற்கு சட்டத்தில் தடையில்லை.
முரசு சின்னத்தை வர்த்தக குறியீடாக வைத்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளால் அது பயன்படுத்தப்படும்போது ஏற்படும் பிரச்சினை பற்றி மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிக்கென்று இந்த சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், அது எந்த வகையிலும் மனுதாரரின் தொழில் நடவடிக்கையில் குறுக்கே வராது.
அந்த சின்னத்தை வைத்துள்ள கட்சியுடன் மனுதாரரின் தொழில் இணைப்பாக உள்ளதாக கருதப்பட முடியாது. என்றாலும், தேர்தல் முடியும்வரை முரசு சின்னம் போட்ட ஆடைகளை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யமாட்டோம் என்று மனுதாரர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
அதன்படி அவர் அந்த சின்னம் அச்சடிக்கப்பட்ட உடைகளை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications