நான் முற்றிலும் நடுநிலையானவன்: மதுரை கலெக்டர் சகாயம் விளக்கம்
மதுரை: நான் யார் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு செயல்படுகிறேன். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளைத் தான் அமல்படுத்துகிறேன் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையத்தால் மதுரை மாவட்ட ஆட்சியராக கொண்டுவரப்பட்டவர் சகாயம். அவர் திமுகவுக்கு எதிராக செயல்படுவதாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி குற்றம் சாட்டினார். அதற்கு சகாயம் தான் யார் பக்கமும் இல்லை என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சகாயம் கடந்த 2009-ம் ஆண்டு நாமக்கல் ஆட்சியராக இருந்தபோது தனது சொத்து விவரங்களை வெளியிட்டார். தமிழகத்தில் சொத்துக் கணக்கை வெளியிட்ட முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குரியவர்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு எதிராக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சகாயம் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கல்லூரி மாணவர்களிடையே உரையாடினார்.
கடந்த மாதம் 24-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். அதன் பிறகு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் பிறகு மதுரையில் நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம் சிக்கியது.
மதுரை மாவட்ட ஆட்சியர் நடுநிலையானவர்: உயர் நீதிமன்றம்
மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் யாருக்கும் ஆதரவாக பேசவில்லை. ஊடகங்களில் அவரது கருத்துகள் தவறாக கூறப்பட்டிருக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சகாயத்தை மாற்றக் கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications