பிரசாரத்தின்போது கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசவில்லை-ஜெ., விஜயகாந்த் விளக்கம்
சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் கருணாநிதி குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கமளித்துள்ளனர்.
முன்னதாக இது தொடர்பாக தேர்தல் ஆணையம், இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்க ஜெயலலிதாவும், விஜதயகாந்த்தும் அவகாசம் கோரியிருந்தனர். இந்த நிலையில் இருவரும் தத்தமது விளக்கங்களை தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில், முதல்வர் கருணாநிதியைத் தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேசவில்லை. பொதுவாழ்க்கை தொடர்புடையதால் அவருடைய அரசியல் வாழ்க்கை, திட்டங்கள், கொள்கைகள் தவறுகள் இவை பற்றியே தேர்தல் பிரசாரங்களில் எடுத்துக் கூறப்பட்டதாகவும் இருவரும் தனித் தனியாக அனுப்பியுள்ள விளக்கத்தில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications